செய்திகள்
போராட்டம்

களம்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது

Published On 2021-02-07 09:02 IST   |   Update On 2021-02-07 09:02:00 IST
களம்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த களம்பூர் பஜார் வீதியில் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் புதுடெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியாக சென்ற விவசாயிகள் மீது தாக்கியதை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சி.நாராயணசாமி தலைமை தாங்கினார். சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் உதயகுமார், மாவட்ட நிர்வாகி செல்வன், மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உள்பட 25 பேரையும் களம்பூர் போலீசார் கைது செய்தனர்.

Similar News