செய்திகள்
கைது

செல்போன் டவரில் பேட்டரி திருடியவர் கைது

Published On 2021-02-06 19:23 IST   |   Update On 2021-02-06 19:23:00 IST
செல்போன் டவரில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூரை அடுத்த மொடையூரில் தனியார் செல்போன் டவர் உள்ளது. நேற்று முன்தினம் டவர் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை திருடி சென்றுள்ளனர். நடமாடும் வாகன டவர் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அறை திறந்து உள்ளதை பார்த்து, அறையில் சென்று பார்த்த போது பேட்டரி திருட்டு போனது தெரிய வந்தது. இதையடுத்து அவர் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து, செங்குனம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News