செய்திகள்
கோப்புபடம்

ஓசூர் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை

Published On 2021-02-06 16:30 IST   |   Update On 2021-02-06 16:30:00 IST
ஓசூர் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் அருகே சின்ன எலசகிரி முல்லைவேந்தன் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 55). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News