செய்திகள்
231 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை- கலெக்டர் தகவல்
கால்நடை பராமரிப்புத்துறை புறம்போக்கு இடத்தில் வசித்த 231 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
கடலூர்:
சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டம்-மேய்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நில ஆக்கிரமிப்புதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்குதல் தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உயர்மட்டக்குழு அலுவலர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங் களில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் வீடுகட்டி குடியிருந்து வரும் நபர்களுக்கு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது குறித்து சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுடன் ஸ்தல ஆய்வு செய்து கருத்துருக்கள் வரப்பெற்றுள்ளது.
இந்த கருத்துருவின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 231 பேருக்கு 8.76 ஏக்கர் நிலத்தை நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துருக்கள் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
மாவட்டத்தில் மேய்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு வகைபாட்டில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட இனங் களான 335-ல் தாசில்தார்களால் ஏற்கப்பட்ட இனங்கள் 231 எனவும், நிராகரிக்கப்பட்ட இனங்கள் 104 எனவும், மாவட்டத்தில் தகுதியுள்ள எந்த பயனாளியும் விடுபட கூடாது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், சப்-கலெக்டர்கள் பிரவின்குமார், மதுபாலன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) (பொறுப்பு) கற்பகம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் குபேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) கண்ணன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டம்-மேய்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நில ஆக்கிரமிப்புதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்குதல் தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உயர்மட்டக்குழு அலுவலர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங் களில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் வீடுகட்டி குடியிருந்து வரும் நபர்களுக்கு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது குறித்து சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுடன் ஸ்தல ஆய்வு செய்து கருத்துருக்கள் வரப்பெற்றுள்ளது.
இந்த கருத்துருவின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 231 பேருக்கு 8.76 ஏக்கர் நிலத்தை நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துருக்கள் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
மாவட்டத்தில் மேய்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு வகைபாட்டில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட இனங் களான 335-ல் தாசில்தார்களால் ஏற்கப்பட்ட இனங்கள் 231 எனவும், நிராகரிக்கப்பட்ட இனங்கள் 104 எனவும், மாவட்டத்தில் தகுதியுள்ள எந்த பயனாளியும் விடுபட கூடாது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், சப்-கலெக்டர்கள் பிரவின்குமார், மதுபாலன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) (பொறுப்பு) கற்பகம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் குபேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) கண்ணன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.