செய்திகள்
தீக்குளிக்க முயன்ற வாலிபர்

திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலக சுவற்றில் ஏறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி

Published On 2021-02-06 10:54 IST   |   Update On 2021-02-06 10:54:00 IST
திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலக சுவற்றில் ஏறி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெற்குப்பை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பஸ் நிலையத்தில் சுமார் ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு ஒப்பந்தப் புள்ளி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்து.

ஒப்பந்தப்புள்ளி நடத்துவதற்காக நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் குவிந்தனர்.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்காக பழைய வியாபாரிகளும், புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரியவர்களும் ஒரே நேரத்தில் கடைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் 2 மணி நேரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

அப்பாது திடீரென பேரூராட்சி காம்பவுண்ட் சுவரில் ஏறி இடைய மேலூரைச் சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளி தினேஷ் என்பவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News