செய்திகள்
கைது

ஊத்தங்கரை அருகே 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- 50 வயதுக்காரர் கைது

Published On 2021-02-05 13:24 IST   |   Update On 2021-02-05 13:24:00 IST
3 வயது பெண் குழந்தைக்கு 50 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான குப்பநத்தம் கிராமத்சை சேர்ந்தவர் துரைராஜ் (வயது50).

இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தையிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த குழந்தையின் பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த துரைராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

3 வயது பெண் குழந்தைக்கு 50 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News