செய்திகள்
மனு

சசிகலாவை வரவேற்க அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் மனு

Published On 2021-02-04 12:52 IST   |   Update On 2021-02-04 12:52:00 IST
வேலூர் மாவட்ட எல்லையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி சசிகலாவை வரவேற்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். வழிநெடுகிலும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரில் சசிகலாவுக்கு அ.ம.மு.க அமைப்பு செயலாளர் ஜெயந்திபத்மநாபன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படுகிறது.

இதுகுறித்து ஜெயந்தி பத்மநாபன் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் நேற்று மனு ஒன்று அளித்தார்.

அதில் சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வருவதை முன்னிட்டு அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. என்ற முறையில் மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்க உள்ளேன்.

அப்போது காலை 11 மணி முதல் 1 மணி வரை தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி வரவேற்பு அளிக்க தேவையான அனுமதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News