செய்திகள்
கைது

மதுபாட்டில் வீசியதில் ஆசிரியை காயம்: முன்னாள் மாணவர்கள் 2 பேர் கைது

Published On 2021-02-01 17:54 IST   |   Update On 2021-02-01 17:54:00 IST
காட்பாடி அருகே காளை விடும் திருவிழா நடைபெற்றது. அப்போது பள்ளியின் அருகே மது குடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பாட்டிலை வீசியதில் ஆசிரியை காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி:

காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. அங்கு சென்று வந்த காட்பாடி அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது மது போதையில் பீர் பாட்டிலை பள்ளியில் சுவர் மீது வீசி உள்ளனர். இந்த நேரத்தில் வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஆசிரியை முத்தேஸ் சர்மில் (45) மீது பீர் பாட்டில் உடைந்த பாகம் பட்டு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடிபோலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 17 வயதுடைய ஒருவர் மற்றும் யுவராஜ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News