செய்திகள்
நாகையில் ரெயில் மோதி வாலிபர் பலி
நாகையில் ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் சுரேஷ் குமார் (வயது30). இவர் நேற்று முன்தினம் இரவு புத்தூர் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருவாரூரில் இருந்து நாகையை நோக்கி வந்த சரக்கு ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.