செய்திகள்
கோப்புபடம்

வேலூர் அருகே நகை அடகுக்கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2021-01-29 18:17 IST   |   Update On 2021-01-29 18:17:00 IST
வேலூர் அருகே நகை அடகுக்கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் பெரிய அல்லாபுரத்தை சேர்ந்தவர் தேவாரம் (வயது 42). இவர் சதுப்பேரி மெயின் தெருவில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய கடையின் அருகே அதே பகுதியை சேர்ந்த கவியரசு (25) என்பவர் மது அருந்தியுள்ளார். இதற்கு தேவாரம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவியரசு கையால் தேவாரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசை கைது செய்தனர்.

Similar News