செய்திகள்
நாகுடி அருகே ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி
நாகுடி அருகே ஆற்றில் மூழ்கி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
நாகுடி அருகே முதுவளர்குடியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவர் நேற்று மேல்மங்கலம் நரசிங்க காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.