செய்திகள்
கண்ணமங்கலம் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது
கண்ணமங்கலம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
ஆரணி அருகே உள்ள கல்பூண்டி கிராமத்தில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த கல்பூண்டியை சேர்ந்த பிரசாந்த் (வயது 24) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியுடன் மணலை பறிமுதல் செய்தனர்.