செய்திகள்
கைது

இளையான்குடி அருகே மது விற்ற 4 பேர் கைது

Published On 2021-01-20 11:46 GMT   |   Update On 2021-01-20 11:46 GMT
இளையான்குடி அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:

இளையான்குடியில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்றதாக தாயமங்கலத்தில் அழகு(வயது 61), இளையான்குடி புறவழிச்சாலையில் சேகர்(44), அதிகரை பஸ் நிறுத்தத்தில் உடையார்(66), கோட்டையூரில் நாகராஜ்(35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களும், ரூ.1350-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News