செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் பார்வையிட்டபோது எடுத்த படம்.

காரைக்காலில் டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகள் கொள்ளை

Published On 2021-01-19 04:52 GMT   |   Update On 2021-01-19 04:52 GMT
காரைக்காலில் டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால்:

காரைக்கால் நேருநகர் விரிவாக்கத்தில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தமிழக பகுதியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத் தில் செல்வம் புகார் செய் தார். அதன்பேரில் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் தலைமையில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News