செய்திகள்
தற்கொலை

காரைக்குடியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-16 14:27 IST   |   Update On 2021-01-16 14:27:00 IST
காரைக்குடியில் செல்போனை தந்தை வாங்கி வைத்துக்கொண்டதால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி:

காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகபிரபு. இவர் சித்தா டாக்டர் ஆவார். அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மகள் ஹரிதா (வயது 18). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதற்காக ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வந்தார். தற்போது ஆன்லைன் வகுப்புகள் முடிவடைந்து விட்டதால் அவரிடம் இருந்த செல்போனை அவரது தந்தை வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ஹரிதா சம்பவத்தன்று மாடி அறைக்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News