செய்திகள்
விபத்து

மோட்டார்சைக்கிள் மோதி வியாபாரி பலி

Published On 2021-01-15 13:09 GMT   |   Update On 2021-01-15 13:09 GMT
காரைக்குடி அருகே மோட்டார்சைக்கிள் மோதி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் (64). இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று காசிவிஸ்வநாதன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அண்ணாநகரைச்சேர்ந்த தினேஷ் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த காசிவிஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News