செய்திகள்
விலையில்லா சைக்கிளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 985 பேருக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

Published On 2021-01-09 14:05 GMT   |   Update On 2021-01-09 14:05 GMT
பெருந்துறையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 985 பேருக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
சென்னிமலை:

பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி, விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி, ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் 473 மாணவர்கள் மற்றும் 512 மாணவிகள் என மொத்தம் 985 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பில் ரூ.38.90 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவுக்கு ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். பெருந்துறை தொகுதி தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரா.முருகன் வரவேற்று பேசினார்.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 985 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரவிச்சந்திரன், அவைத்தலைவர் சந்திரசேகரன், சி.எம்.எஸ் துணை தலைவர் ஜெகதீஸ், மாவட்ட கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல், கண்ணம்மாள் ராமசாமி, ஒன்றிய குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணை தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் ஈ.எம்.ஆர்.மூர்த்தி, அருள்ஜோதி செல்வராஜ், துளசிமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா சம்பத், பார்வதி ராஜ், பழனிச்சாமி, அப்புசாமி, முன்னாள் தலைவர் பெரியசாமி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் விழாவில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News