செய்திகள்
திருவலம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
திருவலம் அருகே டிரான்ஸ்பார்மரில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
திருவலம்:
வேலூர் மாவட்டம், குகையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48). திருவலம் மின்வாரியத்தில் வயர் மேனாக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம், திருவலம் அருகே உள்ள மேல்மாந்தாங்கல் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
அவர் உடனடியாக சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.