செய்திகள்
அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே கூத்தங்குடியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 74). இவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு சிலிண்டர் நிறுவன குடோனில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று சதாசிவம் பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது, 17 வயது என்ஜினீயரிங் மாணவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.