செய்திகள்
திருட்டு

மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-01-08 05:01 GMT   |   Update On 2021-01-08 05:01 GMT
மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை பொட்டவெளி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் அசோக் (வயது 27). இவர் சம்பவத்தன்று மயிலாடுதுறை கவரத்தெருவில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் வாசலில் அசோக் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். மறுநாள் காலை வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவி்ல்லை. அவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அசோக். மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News