செய்திகள்
கைது

திருச்செங்கோடு அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2021-01-05 21:20 IST   |   Update On 2021-01-05 21:20:00 IST
திருச்செங்கோடு அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டி தண்ணீர்பந்தல் முனியப்பன் கோவிலில் கடந்த 29-ம் தேதி இரவு சிலர் உண்டியலை உடைத்து திருடியதாக கூறப்படுகிறது. அந்த கோவில் கண்காணிப்பு கேமராவில் 2 வாலிபர்கள் உண்டியலை உடைத்து திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வாலிபர்களின் அடையாளங்களை வைத்து அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் பன்னீர் குத்திபாளையம் பகுதியை சேர்ந்த பாபு (வயது 22), வரப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (21) ஆகியோரை பிடித்து போலீிசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் உண்டியலை உடைத்து ரூ.2,500 திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து ராசிபுரம் சிறையில் அடைத்தனர்.

Similar News