செய்திகள்
போளூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
போளூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் போளூர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாசிலை அருகில் லாட்டரி சீட்டுகள் விற்ற போளூரை சேர்ந்த சுந்தரம் (வயது 58), போளூர் பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்ற வெண்மணி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (51), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (43) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.16,500 ரொக்கம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.