செய்திகள்
சிவகாசி அருகே மது விற்ற 14 பேர் கைது
சிவகாசி அருகே மது விற்ற 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் காலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இருந்த போதும் பல கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால் சிலர் நகரப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்தனர். இது குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் மாரீஸ்வரன் (வயது 23), முருகன் (33), கருத்தப்பாண்டியன் (37), அழகர்சாமி (38), ஆனந்தராஜ் (26), முனீஸ்வரன் (29), முத்தையா (55), அயனந்தன் (69), பழனிசாமி (42), ஈஸ்வரன் (38), பாண்டிராஜ் (51), கந்தசாமி (38), முனியாண்டி (59), பாலமுருகன் (58) ஆகிய 14 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 102 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.