செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பேரூராட்சி ஊழியர் பலி

Published On 2021-01-02 13:38 IST   |   Update On 2021-01-02 13:38:00 IST
ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி பேரூராட்சி ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூரை அடுத்த காளியூரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 44). இவர்,கே.என்.பாளையம் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராக பணி செய்து வந்தார்.

காளியூர் பகுதியில் நேற்று காலை மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மின்மாற்றியில் பியூஸ் போடுவதற்காக நாகராஜ் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் அவர் மின்மாற்றியில் இருந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்த நாகராஜுக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

Similar News