செய்திகள்
ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் பச்சப்பாளி இந்திரா நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.