செய்திகள்
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினர் மனு
சிவகாசி அருகே வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினர் மனு அளித்துள்ளனர்.
சிவகாசி:
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் அக்கட்சியினர் நேற்று சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தியை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.