செய்திகள்
கோப்பு படம்.

புதுவையில் மேலும் 34 பேருக்கு கொரோனா

Published On 2020-12-24 17:11 IST   |   Update On 2020-12-24 17:11:00 IST
புதுவையில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதுவரை 37 ஆயிரத்து 845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 34 பேருக்கு தொற்று உறுதியானது. 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 178 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 172 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 ஆயிரத்து 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 629 பேர் பலியாகி உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 97.41 சதவீதமாகவும் உள்ளது.

Similar News