செய்திகள்
புறக்காவல்நிலையத்தை விழுப்புரம் சரக டிஐஜி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்

போதைப்பொருட்கள் விற்றால் நடவடிக்கை- போலீஸ் டிஐஜி எச்சரிக்கை

Published On 2020-12-22 15:09 IST   |   Update On 2020-12-22 15:09:00 IST
போதைப்பொருட்கள் விற்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. எச்சரித்துள்ளார்.
வானூர்:

புதுச்சேரியை அடுத்த வானூர் அருகே உள்ளது ஆரோவில் சர்வதேச நகரம். இங்கு 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். ஆரோவில், குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளில் தொடர் குற்றங்கள் நடப்பதால் தற்போது அங்கு புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு்ள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய் தங்கம் வரவேற்றார். புறக்காவல் நிலையத்தை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் போலீசாரிடம் கூறுகையில், ஆரோவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் ஆகும். இங்கு புதுச்சேரியில் இருந்து போதை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்படி யாரேனும் போதைப்பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆரோவில் உள்ள சாலைகள் இரவு நேரங்களில் இருட்டாக உள்ளது. தெரு விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆரோவில் சர்வதேச நகர நிர்வாகி சீனிவாச மூர்த்தி, ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன், வானூர் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News