செய்திகள்
முருகன்

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகனுக்கு வலுக்கட்டாயமாக கஞ்சி வழங்கப்பட்டது

Published On 2020-12-16 07:29 IST   |   Update On 2020-12-16 07:29:00 IST
தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் 23-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் அவரது உடல் மிகவும் சோர்வடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என டாக்டர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயில் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் என கூறினர்.

அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. நேற்றும் முருகன் 23-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஜெயில் அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Similar News