செய்திகள்
தீவிபத்து

சாத்தூர் அருகே தீக்குச்சி கம்பெனியில் பயங்கர தீவிபத்து

Published On 2020-12-13 11:45 IST   |   Update On 2020-12-13 11:45:00 IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீக்குச்சி கம்பெனியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையத்தில் காந்தி என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி கம்பெனி உள்ளது.

நேற்று நள்ளிரவு இங்கு தீக்குச்சி தயாரிக்க வைத்திருந்த குச்சி குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறைனர். போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான குச்சிகள் தீயில் கருகி சேதமடைந்தது.

நள்ளிரவு என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின் கசிவு கரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News