செய்திகள்
கொள்ளை

விருதுநகர் அருகே டயர் விற்பனை நிலையத்தில் திருட்டு

Published On 2020-12-12 16:48 IST   |   Update On 2020-12-12 16:48:00 IST
விருதுநகர் அருகே டயர் விற்பனை நிலையத்தில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரில் திருவேங்கடத்தை சேர்ந்த கர்வின் அழகுமலை என்பவர் கனரக வாகன டயர் விற்பனை நிலையம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள லாரி டயர்கள் மற்றும் ரொக்கம் ரூ.19 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றதாக கர்வின் அழகுமலை அளித்த புகாரின் பேரில் வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News