செய்திகள்
குடியாத்தம் அருகே மூதாட்டியை கொலை செய்த பேரன் கைது
குடியாத்தம் அருகே மூதாட்டியை கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் சோனியாநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 60). இவரை நேற்று முன்தினம் இரவு அவருடைய பேரன் ராகேஷ் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ராஜேஸ்வரியின் பேரன் ராகேஷ் (19) என்பவரை நேற்று காலை கைது செய்தனர்.