செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-12-07 20:31 GMT   |   Update On 2020-12-07 20:31 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஜோதி சின்னராஜ் (வயது 38) என்ற பெண், ஒருவித பதற்றத்துடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர் அணிந்து இருந்த மேல் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News