செய்திகள்
கோப்புபடம்

பந்தலூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-04 14:21 GMT   |   Update On 2020-12-04 14:21 GMT
பந்தலூர் அருகே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பந்தலூர் அருகே உள்ள எருமாடு பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதற்கு விவசாய சங்க நிர்வாகி பிலீப் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், எருமாடு பகுதி செயலாளர் ராஜன், முஸ்லிம் லீக் சார்பில் உம்மர், சேரங்கோடு ஊராட்சி தலைவர் சந்திரபோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News