செய்திகள்
கூடலூரில் பாக்கு மரங்களில் நோய் தாக்குதல்- விவசாயிகள் கவலை
கூடலூரில் பாக்கு மரங்களில் நோய் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கூடலூர்:
கூடலூரில் தேயிலை, காபி, குறுமிளகு, நேந்திரன் வாழை விவசாயத்துக்கு இணையாக பாக்கு விவசாயமும் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பாக்குகளை மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் கணிசமான வருவாயை ஆண்டுதோறும் விவசாயிகள் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பாக்கு மரங்களை மாகாளி நோய் தாக்கி வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள பாக்குகள் மரங்களில் இருந்து கீழே உதிர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆண்டுக்கு ஒருமுறை பாக்கு விளைகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாக்கு விளைகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் மரங்களில் பாக்கு விளைய தொடங்குகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மரங்களில் விளைச்சல் அதிகரிக்கும். பின்னர் நவம்பர் முதல் ஜனவரி வரை பாக்கு அறுவடை செய்யப்படும் காலமாகும். இந்த ஆண்டில் பாக்கு விளைச்சல் அதிகரித்து இருந்தது. ஆனால் மாகாளி நோய் தாக்கி மரங்களில் இருந்து பாக்குகள் உதிர்ந்து வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கவலையுடன் கூறினர்.
இதுகுறித்து கூடலூர் தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பல நாட்கள் தேங்கி நின்றது. பாக்கு தோப்புகளில் மழைநீர் தேங்காமல் இருக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வெளியே செல்ல முடியாத வகையில் பல இடங்களில் சூழ்ந்து இருந்ததால் பாக்கு மரங்களை மாகாளி நோய் தாக்கி வருகிறது. எனவே போடோ மிக்சர் கலவையை பயன்படுத்தி பாக்கு மரங்களை பாதுகாக்கலாம். இதன் மூலம் நோய் கட்டுப்படுத்தப்படும் என்றனர்.
இதற்கிடையில் பாக்கு தோட்டங்களில் மர்ம ஆசாமிகள் இரவில் நுழைந்து பாக்குகளை திருடி செல்கின்றனர். பின்னர் மறுநாள் காலையில் மொத்த வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று விடுகின்றனர். இதை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் பாக்குகளை கொள்முதல் செய்யும் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அடையாள ஆவணங்கள் வைத்துள்ள விவசாயிகளிடம் மட்டுமே பாக்குகள் கொள்முதல் செய்ய வேண்டும்.
இதுவரை பாக்கு திருடர்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இரவில் தோட்டங்களுக்குள் நுழைந்து பாக்குகளை திருடி செல்லும் கும்பலை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
கூடலூரில் தேயிலை, காபி, குறுமிளகு, நேந்திரன் வாழை விவசாயத்துக்கு இணையாக பாக்கு விவசாயமும் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பாக்குகளை மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் கணிசமான வருவாயை ஆண்டுதோறும் விவசாயிகள் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பாக்கு மரங்களை மாகாளி நோய் தாக்கி வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள பாக்குகள் மரங்களில் இருந்து கீழே உதிர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆண்டுக்கு ஒருமுறை பாக்கு விளைகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாக்கு விளைகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் மரங்களில் பாக்கு விளைய தொடங்குகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மரங்களில் விளைச்சல் அதிகரிக்கும். பின்னர் நவம்பர் முதல் ஜனவரி வரை பாக்கு அறுவடை செய்யப்படும் காலமாகும். இந்த ஆண்டில் பாக்கு விளைச்சல் அதிகரித்து இருந்தது. ஆனால் மாகாளி நோய் தாக்கி மரங்களில் இருந்து பாக்குகள் உதிர்ந்து வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கவலையுடன் கூறினர்.
இதுகுறித்து கூடலூர் தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பல நாட்கள் தேங்கி நின்றது. பாக்கு தோப்புகளில் மழைநீர் தேங்காமல் இருக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வெளியே செல்ல முடியாத வகையில் பல இடங்களில் சூழ்ந்து இருந்ததால் பாக்கு மரங்களை மாகாளி நோய் தாக்கி வருகிறது. எனவே போடோ மிக்சர் கலவையை பயன்படுத்தி பாக்கு மரங்களை பாதுகாக்கலாம். இதன் மூலம் நோய் கட்டுப்படுத்தப்படும் என்றனர்.
இதற்கிடையில் பாக்கு தோட்டங்களில் மர்ம ஆசாமிகள் இரவில் நுழைந்து பாக்குகளை திருடி செல்கின்றனர். பின்னர் மறுநாள் காலையில் மொத்த வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று விடுகின்றனர். இதை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் பாக்குகளை கொள்முதல் செய்யும் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அடையாள ஆவணங்கள் வைத்துள்ள விவசாயிகளிடம் மட்டுமே பாக்குகள் கொள்முதல் செய்ய வேண்டும்.
இதுவரை பாக்கு திருடர்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இரவில் தோட்டங்களுக்குள் நுழைந்து பாக்குகளை திருடி செல்லும் கும்பலை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.