செய்திகள்
தளி அருகே குட்டையில் மூழ்கி விவசாயி பலி
தளி அருகேகுட்டையில் மூழ்கி விவசாயி பலியான சம்பபம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பெத்தேராஜ் (வயது 44). விவசாயி. சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள குட்டையில் மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.