செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-12-01 00:54 GMT   |   Update On 2020-12-01 00:54 GMT
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
சென்னை:

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த சென்னையைச் சேர்ந்த சையத் நதீமுர் ரகுமான் (வயது 33) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் முகத்தில் பூச பயன்படுத்தும் கிரீம், தைலம், நக வெட்டிகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மை கார்கள் இருந்தது. சந்தேகத்தின்பேரில் அவற்றை பிரித்து சோதனை செய்தபோது அவற்றுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக சையத் நதீமுர் ரகுமானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News