செய்திகள்
தற்கொலை

ஓசூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2020-11-30 06:19 GMT   |   Update On 2020-11-30 06:19 GMT
ஓசூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் சாந்தபுரத்தை சேர்ந்தவர் எல்லப்பா. இவருடைய மனைவி லட்சுமி (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகிறது. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லட்சுமி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் லட்சுமி பரிதாபமாக இறந்தார். திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News