செய்திகள்
நகை பறிப்பு

செங்கல்பட்டு அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2020-11-29 05:52 GMT   |   Update On 2020-11-29 05:52 GMT
செங்கல்பட்டு அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து லட்சுமி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News