செய்திகள்
நாராயணசாமி

நிவர் புயல் சேதம்- புதுச்சேரிக்கு ரூ. 100 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு நாராயணசாமி கடிதம்

Published On 2020-11-28 11:39 GMT   |   Update On 2020-11-28 11:39 GMT
நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நிவர் புயலால் புதுச்சேரியில் ஏராளமான வீடுகள், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இடைக்கால நிவாரணமாக ரூ. 100 கோடி வழங்க வேண்டும்.

இந்த நிவாரணம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது.

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு திங்கள்கிழமை புதுச்சேரிக்கு வர உள்ள நிலையில் முதல் அமைச்சர் நாராயணசாமி ரூ.100 கோடி கேட்டுள்ளது குறிப்பிடித்தக்கது.
Tags:    

Similar News