செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2020-11-28 10:37 GMT   |   Update On 2020-11-28 10:37 GMT
குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தேரழுந்தூரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அன்று இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News