செய்திகள்
தற்கொலை

மணல்மேடு அருகே பெண் தற்கொலை

Published On 2020-11-28 10:29 GMT   |   Update On 2020-11-28 10:29 GMT
குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணல்மேடு:

மணல்மேடு அருகே ஐவாநல்லூர் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமுத்துக்குமரன் (வயது 42). ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா (29). வாய் பேசமுடியாதவர். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சல் அடைந்த நித்யா நேற்று வீட்டின் மாடியில் உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
Tags:    

Similar News