செய்திகள்
கோப்பு படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 77 பேர் பாதிப்பு

Published On 2020-11-28 10:27 GMT   |   Update On 2020-11-28 10:27 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 77 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேர் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 301 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 894 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 712 பேர் உயிரிழந்துள்ளனர். 695 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 557 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,522 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 651 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 35, 31 வயதுடைய ஆண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 26 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர். 277 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News