செய்திகள்
விபத்து பலி

காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2020-11-28 08:12 GMT   |   Update On 2020-11-28 08:12 GMT
காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரவிராகுல் (வயது 23). இவர் ஓசூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி ஓசூரில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரவு 9.30 மணியளவில் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென பிரேக் போட்டதில், இவர் அந்த வாகனத்தின் பின்புறம் மோதியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News