செய்திகள்
தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே கணவர், குழந்தைகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2020-11-28 07:49 GMT   |   Update On 2020-11-28 07:49 GMT
கணவர், குழந்தைகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள ஆஞ்சகிரி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருடைய மனைவி சத்யா என்ற சசிகலா (வயது 27). கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் நாகேந்திரன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்யாவின் 2 குழந்தைகளும் உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சத்யா, தனது தாயுடன் தட்டக்கல் கிராமத்தில் வசித்து வந்தார். கணவர் மற்றும் 2 குழந்தைகள் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த சத்யா கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News