செய்திகள்
கோப்புபடம்

வேளாங்கண்ணி அருகே கணவன்- மனைவிக்கு அரிவாள் வெட்டு

Published On 2020-11-28 13:07 IST   |   Update On 2020-11-28 13:07:00 IST
வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே நிர்த்தன மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரமணிராஜன் (வயது 58). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் தமிழ்குமரன் என்பவருக்கும் இடையே வேலி தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழ்குமரன் வேலி ஓரத்தில் இரண்டு தென்னை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மரங்கள் ரமணிராஜன் வீட்டின் கூரை மீது சாய்ந்த நிலையில் இருந்ததால் புயல் எச்சரிக்கை காரணமாக அந்த மரங்களை வெட்டுமாறு அவர், தமிழ்குமரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்குமரன் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகிய இருவரும் சேர்ந்து ரமணிராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரை அரிவாளால் வெட்டியும், கட்டையால் தாக்கினர். இதில் ரமணிராஜன், சாந்தி ஆகியோர் காயம் அடைந்தனர். அதேபோல ரமணிராஜன் தாக்கியதில் தமிழ்குமரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த 3 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News