செய்திகள்
கோப்புபடம்

வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

Published On 2020-11-28 07:33 GMT   |   Update On 2020-11-28 07:33 GMT
வேதாரண்யம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 75). இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி விட்டது. இதனால் கணேசன், மனைவி மல்லிகாவுடன் வசித்து வந்தார். பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த கணேசன் மனமுடைந்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். 

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News