செய்திகள்
துபாயில் இருந்து ரூ.90 லட்சம் தங்கம் கடத்தல்- 3 பேர் கைது
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு ரூ.90 லட்சம் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில், பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த திருச்சியை சேர்ந்த நாசர் அலி சிராஜுதீன் (வயது 36), பாபு பதுஷா (20), சென்னையை சேர்ந்த முகமது கடாபி (49) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில், 3 பேரும் அணிந்து இருந்த உள்ளாடைகளில் ரகசிய அறை அமைத்து, தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடமும் இருந்து ரூ.90 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில், பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த திருச்சியை சேர்ந்த நாசர் அலி சிராஜுதீன் (வயது 36), பாபு பதுஷா (20), சென்னையை சேர்ந்த முகமது கடாபி (49) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில், 3 பேரும் அணிந்து இருந்த உள்ளாடைகளில் ரகசிய அறை அமைத்து, தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடமும் இருந்து ரூ.90 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.