செய்திகள்
புயல் காற்று

நிவர் புயல்: காற்று வீசும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்: கடலூர் ஆட்சியர்

Published On 2020-11-25 16:36 IST   |   Update On 2020-11-25 16:36:00 IST
நிவர் புயல் கரையை கடக்க தொடங்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

புதுவை கடற்கைரை அருகே கரையை கடந்தாலும் கடலூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிபார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் புயலை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணியில் இருந்து காற்று வீசத் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காற்று வீசத் தொடங்கியதும் மின்சாரம் துண்டிக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் டார்ச் லைட், மெழுகுவர்த்திகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.

Similar News