செய்திகள்
தற்கொலை

கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை

Published On 2020-11-25 09:07 GMT   |   Update On 2020-11-25 09:07 GMT
காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஓரிக்கை இந்திரா நகரை சேர்ந்தவர் இளவரசன் (வயது 45). இவர் சொந்தமாக லாரி வாங்கி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்த இளவரசன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டின் மாடியில் படுக்க சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் இளவரசன் வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது, இளவரசன் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News